சென்னையில் விடிய விடிய மதுவிருந்துடன் மங்கையர் நடனம்..500க்கும் மேற்பட்டோர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரெசார்ட்டில் விடிய விடிய போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விருந்தில் நடனமாடிய 50 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், நள்ளிரவு 1 மணி முதல் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். இதில் சட்டவிரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த சைமனை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த மது விருந்தில் நடனமாடிய 50 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai resort unauthority drink party and women dance police arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->