2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் குடுவை கண்டெடுப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் ராகுல் மற்றும் வரலாற்று ஆர்வலர் பிரதாப் உள்ளிட்டோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குறியீடு பொறித்த சிவப்புநிற சுடுமண் குடுவை மற்றும் குறியீடு உள்ள கருப்பு மற்றும் சிவப்பு நிறமுள்ள ஓடுகளை கண்டறிந்தனர். இந்த குறியீடுகள் தொல்லியல் துறையினரால் ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.

இந்த குறியீட்டுக் காலத்தை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானதாக கணிக்க முடிகிறது என்று, தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

clay pot found near thenpennai river


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->