இந்தியில் கவிதை சொல்லாத மாணவன் - அரை நிர்வாணமாக்கிய ஆசிரியர் பணி நீக்கம்.!
teacher suspend for attack school student in chennai
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன் பள்ளியில் இந்தி ஆசிரியை ஒருவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இந்தியில் கவிதை சொல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவனுக்கு இந்தி மொழியில் கவிதை சொல்ல தெரியவில்லை. இதன் காரணமாக அந்த மாணவனை இந்தி ஆசிரியை பலமுறை தாக்கியுள்ளார்.
மேலும், மாணவனின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கிய மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் இந்தி ஆசிரியையை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியத்தைத் தொடர்ந்து ஆசிரியை தனது தவறை உணர்ந்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்பதற்கு தயாராக இருப்பதாகவும், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாணவனின் பெற்றோர் ஆசிரியையை சந்திக்க விரும்பவில்லை என்றும், கல்வியாண்டு முடியும் வரையில் அவர் பணியில் தொடரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் முடிவைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் படி இந்தி ஆசிரியையை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை ஆசிரியை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher suspend for attack school student in chennai