#BREAKING | ஏரியா சபை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! - Seithipunal
Seithipunal


"ஏரியா சபை" நிகழ்ச்சி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1994-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மூலம் அறிமுகமானது கிராம சபை. இதன் அதிகாரம் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு சற்றுக் குறைந்தது என்றாலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் சபை இதுவேயாகும். 

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் மக்களாட்சி மலர, ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பல வருடங்களாக நடைபெறாமல் இருந்த ஏரியா சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அரசியல் காட்சிகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

குடியரசு தினம், தொழிலாளர் நாள், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள், உள்ளாட்சி நாள் என கிராம சபை நடைபெறும் நாட்களில், நகர, மாநகர சபைகளையும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வாய்ப்பட்ட நிலையில், ஆண்டுகளுக்கு 4 முறை "ஏரியா சபை" நிகழ்ச்சி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாக்காளர் தினம் , அம்பேத்கர் பிறந்த தினம் , அண்ணா பிறந்த தினம், மனித உரிமை தினம் ஆகிய நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் "ஏரியா சபை" நிகழ்ச்சி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்,
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin Order for Area Sabha may 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->