ஆன்லைன் ரம்மியில் ரூ.75 ஆயிரம் பணத்தை இழந்த கல்லூரி மாணவன்.! விஷம் குடித்து தற்கொலை முயற்சி.!
College student who lost money in online rummy attempted suicide in salem
ஆன்லைன் ரம்மியில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் சதாசிவபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். இவரது மகன் சூரியபிரகாஷ்(20) தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், சூரிய பிரகாஷ் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்து உள்ளார். இதனால் மனமுடைந்த சூரிய பிரகாஷ், தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துள்ளார்.
இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக சூரிய பிரகாஷை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
College student who lost money in online rummy attempted suicide in salem