திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி திருவிழா நாளை 31.12.2024 முதல் 9.01.2025ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025ஆம் தேதி முதல் 20.01.2025ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது.

மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் வருகின்ற ஜனவரி 10ம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் ஜனவரி 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று தெரிவித்துள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coming january 10th local holiday to trichy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->