திண்டுக்கல்: இரட்டை கொலை.. குற்றவாளியை சுத்து போட்ட உறவினர்கள்!
Construction workers beaten to death with sticks
திண்டுக்கல் அருகே முன் விரோதக் காரணத்தால் கட்டிட தொழிலாளிகளைக் கட்டையால் அடித்து கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் அழகுமலை மற்றும் மனோகரன். இவர்கள் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞருடன் இவர்களுக்கு கடந்த ஆண்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அழகுமலை, மனோகரன் ஆகிய இருவரையுமே முன்விரோதக் காரணத்தால், நவீன் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் நவீனைத் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய நவின் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
கொல்லப்பட்டவரின் உறவினர்கள் நவீனைத் தாக்குவதற்காக மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, நவீனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Construction workers beaten to death with sticks