அதிர்ச்சி.. 13 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மீன்பிடித் தடை காலம் நிறைவடைந்து மீனவர்கள் கடந்த சில நாட்களாக தான் கடலுக்குக் சென்று வருகின்றனர். அப்படி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 13 மீனவர்களையும் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எல்லைத்த தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 13 மீனவர்களை ஜூலை 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court custody to tn fishermans till july 25


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->