பாலியல் வழக்கு; கிருஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம்..!
Court has dismissed the anticipatory bail application filed by the Christian religious preacher John Jebaraj
கிறிஸ்தவ மதபோதகரான ஜான் ஜெபராஜ்(37) தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்த 14 வயது மற்றும் 17 வயது வயது சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமிகளின் பெற்றோர் காட்டூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை ஜெபராஜ் தலைமறைவானார். இதன் காரண்மாக அவரை பிடிக்க 03 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில், கேரள மாநிலம் மூணாறில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் வருகிற 25-ந் தேதி வரை ஜான் ஜெபராஜ், நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே ஜான் ஜெபராஜ் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Court has dismissed the anticipatory bail application filed by the Christian religious preacher John Jebaraj