கடலூர்: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை? பரபரப்பில் சிதம்பரம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

சம்பவத்தன்று மாணவி திடீரென காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில், திருச்சி சிறுகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை கண்டுபிடித்தனர். 

மாணவி பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு சேலத்தில் அடையாளம் தெரியாத வீட்டில் அடைக்கப்பட்டதாகவும், அங்கு பலமுறை பாலியல் தொந்தரவில் ஆளாகியதாகவும் தெரிவித்தார். 

இதனால் தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மாணவி கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த செய்தி சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore College girl Abuse case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->