தீவிர புயலாக கரையை கடக்கும் 'ரிமல்' - வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தெற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்று மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய வங்க கடல் பகுதியில் சுமார் 750 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும்.

பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து மே 25ஆம் தேதி (நாளை) தீவிரப் புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த தீவிரப்பு புயல் மே 26 ஆம் தேதி நள்ளிரவில் வங்கதேசம் - மேற்கு வங்க மாநிலம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயல் தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்றும், தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக மழை பொழிவு குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயல் வருகின்ற 28 ஆம் தேதி தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyclone Rimal update


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->