தூங்கிக்கொண்டிருந்த தாயை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சிறுமி.. அதிர்ச்சியில் காவல்துறையினர்.!!
Daughter killed mother
தூத்துக்குடியில் ஆண் நண்பருடன் சேர்ந்து தாயை கொலை செய்த சிறுமியால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி வண்ணார் 2-வது தெருவை சேர்ந்தவர் முனியலட்சுமி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். முனியலட்சுமியின் 17 வயது மகள் அக்கம்பக்கத்தில் உள்ள ஆண் நண்பர்களும் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. தாய் முனியலட்சுமி இதை கண்டித்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சிறுமி தனது தாயை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் முனியலட்சுமி தூங்கிக் கொண்டிருந்த போது, தனது ஆண் நண்பர்களை அழைத்து வந்து தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து காவல்துறைக்கு போன் செய்து தனது தாயை கொலை செய்துவிட்டனர் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முனியலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சிறுமி தனது நண்பருடன் சேர்ந்து தாயை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி மற்றும் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். அத்துடன் கொலை வழக்கு சம்பந்தமாக தங்கம், கோடா ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண் நண்பருடன் சேர்ந்து தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.