தகாத உறவுக்கு ஆசைப்பட்டு மனைவி கள்ளக்காதலனுடன் எஸ்கேப்! கணவர் தற்கொலை! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலனுடன் மனைவி 3 பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு சென்றதால், அவரது கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் பாலமேட்டை சேர்ந்தவர் பொன்வேந்தன் (35). இவர், சென்னையில் கால்டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முத்துப்பிரியா (30). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 

முத்துப்பிரியா பாலமேட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார், அப்போது அவருக்கு அங்கு வேலை பார்த்த  மற்றொருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்று முன்தினம் தன் குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் முத்துப்பிரியா சென்றுவிட்டார். 

இது குறித்து பாலமேடு காவல்நிலையத்தில் கணவர் பொன்வேந்தன் புகார் அளித்துள்ளார். மேலும், அவரது 3 குழந்தைகளையும் தனது தாயார் வீட்டில் விட்டுள்ளார். குழந்தைகளையும், தன்னையும் தவிக்க வைத்து விட்டுச் சென்ற மனைவியை நினைத்து நினைத்து பொன்வேந்தனுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாலமேடு காவல்நிலையம் முன்பு உள்ள சாலையில் நேற்று மாலை 5 மணி அளவில்  பொன்வேந்தன் திடீரென தனது மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவரது உடல் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்உயிரிழந்தார். 

இது குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Desperate for an inappropriate relationship and escape with his cheating wife Husband suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->