பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை! தொடர்ந்து 3 ஆண்டுகள்! தர்மபுரியை பதறவைத்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே பள்ளி மாணவி ஒருவருக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சரவணனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் சரவணன் பணி புரியும் அந்தப் பள்ளியில் படித்த ஒரு மாணவி, ஆசிரியர் சரவணன் மீது தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவரின் அந்த பாலியல் புகாரில், தனக்கு தந்தை இல்லாததால் ஆசிரியர் சரவணன் தன்னை படிக்கவைப்பதாக கூறினார். இதனை அடுத்து தர்மபுரியில் உள்ள ஒரு பள்ளியில் நான் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தேன்.

கடந்த 2021 ஆம் ஆண்டு எனக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறிய ஆசிரியர் சரவணன், என்னை வீட்டுக்கு வர வைத்தார். அங்கு என்னை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். 

இதே போல் நான் 12ஆம் வகுப்பு படிக்கும் வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக என்னை மிரட்டி ஆசிரியர் சரவணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக, மாணவி அந்த பாலியல் புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த பாலியல் புகார் குறித்து சரவணன் இடம் போலீசார் சிறப்பு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri School Girl Harassment case Govt Teacher Arrested


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->