ஒரு நொடியில் அதிமுக பொதுச் செயலாளரான அண்ணாமலை - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால்தான், ஓபிஎஸ் வேட்டி கட்டி வெளியே வர முடிந்தது. 

ஆனால், இப்போது தெய்வம் தந்த தண்டனையால் அவரால் அதிமுக வேட்டியைக்கூட கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் பேசுவதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள வேண்டாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்றார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது தொடர்பான நிலைப்பாடுகளை எங்கள் பொதுச்செயலாளர், புரட்சித்தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளார்” என்று ஒரே போடாக போட்டார். 

இதைக்கேட்ட அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலையா? என்று அதிர்ச்சியடைந்து விழித்தபடியே நின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் சீரியஸாக தந்த இந்த பேட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindukal seenivasan press meet in dindukal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->