பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்த வகையில் தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு கிழமை என வாரத்தின் 7 நாட்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diploma college admission starts from tomorrow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->