திண்டுக்கல்லில் பரபரப்பு - பாலியல் தொழில் நடத்திய திமுக நிர்வாகிகள் - கூண்டோடு சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் பரபரப்பு - பாலியல் தொழில் நடத்திய திமுக நிர்வாகிகள் - கூண்டோடு சிக்கிய சம்பவம்.!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டி நாயக்கன்பட்டி பகுதியில் சிலர் பாலியல் தொழில் நடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் புகார் வந்தது. அதன் படி போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாலியல் தொழிலில் தரகர்களாகச் செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், திண்டுக்கல்லைச் சேர்ந்த சண்முகம், சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மரிய ஸ்டாலின் பாண்டி உள்பட மூன்று பெண்களை போலீசார் பிடித்துள்ளனர்.

அதில், மூன்று பேர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து விட்டனர். இதனால், போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், தப்பித்துச் சென்றவர்கள் உண்டார்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ், அருண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் அருண் என்பவர் திமுக மாமன்ற உறுப்பினர் விஜயாவின் மருமகன் என்பதும், திண்டுக்கல் மாநகர திமுக மேற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போன்று ஸ்டீபன் ராஜ், மாநகரம் மேற்கு பகுதி முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அருண் மற்றும் ஸ்டீபன் ராஜைத் நேற்று கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள கார்த்திக்கை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk supporters arrested for prostitution work in dindukal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->