உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக அரங்க. மகாதேவன் - அன்புமணி இராமதாஸ் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க.  மகாதேவன் அவர்களை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுக்கு, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த வாழ்த்துச்செய்தியில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் அரங்க.  மகாதேவன் அவர்களை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2013-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மகாதேவன் அவர்கள் கடந்த 11 ஆண்டுகளில் சிறப்பான பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.  

தமிழ் மொழி மீது மிகுந்த பற்றும், தமிழ் மொழியில் புலமையும் கொண்ட மகாதேவன் அவர்கள் , தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.  

உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் பணியில் இருக்கப் போகும் நீதியரசர் மகாதேவன் அவர்கள், சமூகநீதி, மொழி சார்ந்த சிறப்பான தீர்ப்புகளை வழங்கி நீதித்துறை வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Wish to Chennai HC Judge Mahadevan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->