கொலை செய்யப்பட்டு கிடந்த ஒட்டுநர்.. மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! - Seithipunal
Seithipunal


கால்டாக்சி டிரைவரை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் பேருந்து நிலையத்தில் அரையாளம் தெரியாத நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில். இறந்தவர் ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பதும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒட்டுநராக வேலை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driver Murder In Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->