நீட் தேர்வை ஒழித்து வரலாறு படைப்பார் உதயநிதி - அமைச்சர் துரைமுருகன்.!
Duraimurugan speech in NEET protest
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதேபோல் திமுக ஆட்சியை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுபிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னையை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் எதிர்த்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதனை கண்டு கொள்ளாமல் உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வு எதிர்த்து வருகிறோம். ஏனென்றால் இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உள்ளது. நீட் தேர்வை ஒழிக்கும் வரை ஓய மாட்டேன் என அமைச்சர் உதயநிதி சபதம் எடுத்துள்ளார். நீட் தேர்வு எதிராக அமைச்சர் உதயநிதி தொடர்ந்து போராட்டங்களை அறிவிப்பார். நீட் தேர்வு ஒழிய காரணமாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின் என்ற வரலாறு உருவாகும் என அவர் கூறியுள்ளார்.
English Summary
Duraimurugan speech in NEET protest