ஈரோடு அருகே 5 சவரன் தங்க தாலியை கொள்ளையடித்த மர்ம நபர்! போலீசார் தீவிர விசாரணை!
erode jewelry catch robber
அந்தியூர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு 5 சவரன் தங்க தாலியை கத்தியை கட்டி பறித்து சென்ற மர்ம நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்:
ஈரோடு: அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 55). இவரது மனைவி தங்கமணி (வயது 47). இவர்கள் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.
இரண்டு தினங்களுக்கு முன்பு தங்கமணி அணிந்திருந்த 5 சவரன் தங்க தாலியை முகமூடி அணிந்த மர்ம நபர் கத்தியை கட்டி பறித்து சென்றுள்ளார். இது குறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதை அடுத்து முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் தலைமை காவலர் செந்தில்குமார் தலைமையில் துணை தலைமை காவலர் தனபால், திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடத்திய போலீசார், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் காலை முதல் நகை பறிப்பு சம்பவம் நடை பெற்றது வரை வந்து சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிகளை அதிகப்படுத்தியுள்ளனர். மேலும் அந்தியூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இரவு 11 மணிக்கு மேல் செயல்படுத்த கூடாது.
ஏனெனில் திருடிய குற்றவாளிகள் உடனடியாக கடைக்குள் சென்று அமர்ந்து விடுவதால் அவர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் டீக்கடை உரிமையாளர்களுக்கு இரவு 11 மணிக்கு மேல் கடையை திறக்க கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
English Summary
erode jewelry catch robber