சோகத்தில் அரசியல் களம் - முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்.!
ex mla karuppasami pandian passed away
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கடந்த 1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த கருப்பசாமி பாண்டியன், 1977-ல் ஆலங்குளம் தொகுதியிலும், 1980-ல் பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
அப்போது ஜெயலலிதாவோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து கருப்பசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து 2015-ல் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட இவர், 2016-ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் 2018-ல் மீண்டும் தி.மு.க.விற்கு வந்த கருப்பசாமி பாண்டியன், 2020-ல் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
ex mla karuppasami pandian passed away