உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலன் செய்த  கொடூர செயல்.! - Seithipunal
Seithipunal


சென்னை பூந்தமல்லி அருகே குன்றத்தூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணம்மாள் (50வயது) இவர் தனது கணவரை பிரிந்து 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணம்மாள் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கண்ணமாளுக்கும், அவர் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் ராஜா (31வயது) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணம்மாள் வீட்டுக்கு வந்த ராஜா, அவரை தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜாவை கண்ணம்மாள் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த ராஜா, கண்ணம்மாளை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake boyfriend killed the fake girlfriend refused to have sex


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->