தந்தை செல்போன் தராததால்.. 10 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கிணத்துக்கடவு அடுத்த கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி கிட்டாணம்மாள். தம்பதியினருக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.

பழனிசாமியின் கடைசி மகனான அர்ஜுனன் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அர்ஜுனன் தந்தையிடம் கேம் விளையாட செல்போன் கேட்டுள்ளார். இதற்கு தந்தை பழனிசாமி செல்போனை தர மறுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுவன் அர்ஜுனன், வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father didn't give mobile son suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->