மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பதற்றத்தில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


கோவாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் சில மணி நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் நேற்று முன்தினம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து அளித்த தவலின்பேரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் மும்பை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், இந்த விமானம் இரவு 10.30 மணி அளவில் மும்பையில் தரைஇறங்கியது. பாதுகாப்பு கருதி அந்த விமானம் தனித்து விடப்பட்டதனால் விமானத்தில் இருந்த பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டு அவர்களின் உடைமைகள் சோதனை நடத்திய பின்னர் அவர்கள் அனுப்பிவிடபட்டன.

இந்த சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bomb thread to mumbai flight


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->