ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த வாலிபர் - குமரியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள்சந்தை அருகே காரங்காடு புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் ஷாஜின். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ஷாஜின் அந்த மாணவியிடம் கடந்த 2022-ம் ஆண்டு பணம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் தனது கையில் கிடந்த தங்க மோதிரத்தை கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவி பல மாதங்களுக்குபின் மோதிரத்தை கேட்டுள்ளார். அதற்கு ஷாஜின் மோதிரம் வீட்டில் உள்ளதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

அதனை ஷாஜின் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு அதனைக் காட்டி அந்த மாணவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். கடைசியாக மாணவியிடம் ரூ.2 லட்சம் கேட்டு பணத்தை தரவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதற்கிடையே ஷாஜின் அந்த மாணவி ஆடை மாற்றும் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார். உடனே அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for published obscene photo at social media in kanniyakumari


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->