#சென்னை || ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து! போராடும் தீயணைப்பு வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னை புழல் - அம்பத்தூர் சாலையில் உள்ள சூரப்பட்டில் பல்லாவரத்தைச் சேர்ந்த அனந்த ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ரசாயன குடோனில் நள்ளிரவு 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து புழல் காவல் துறையினருக்கும், செங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், வாகன டயர்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்தது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாகத்  தீ பற்றி எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியும் மளமளவென எரிந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமமாக இருந்ததால் கூடுதலாக அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்து சம்பவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire in a chemical warehouse in chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->