கிடுகிடுவென உயர்ந்த மீன்கள் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதித்து மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி இந்த ஆண்டும் வரும் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்கால சீசன் நாளை நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது. இதனால் சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

அதன் படி சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டு வந்த வஞ்சிரம் மீன் இன்று ரூ.1,000-க்கும், ரூ.200 முதல் ரூ.300 வரை விற்கப்பட்ட சங்கரா மீன் இன்று கிலோ ரூ.600-க்கும், வவ்வால் மீன் இன்று கிலோ ரூ.650க்கும் விற்பனையாகிறது. மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக இனி வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றுத் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fish price increase in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->