நடுவானில் திடீரென கோளாறு... அவசரமாக தரையிறங்கிய விமானம்..! - Seithipunal
Seithipunal


கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு நேற்று காலை கர்த்தார் விமானம் ஒன்று புறப்பட்டது. அப்பொழுது விமானம் நடுவானில் சென்றபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், பயணிகள் விமானத்திலேயே பயணிகள் அமர வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கர்த்தார் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, சுமார் 6 மணி நேரத்திற்குப் பின்னர் சென்னையில் இருந்து விமானம் ஜகார்த்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight landed in Chennai due to technical problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->