வெள்ள பாதிப்பு: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு!
Flood damage Union Minister Nirmala Sitharaman inspection
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நியமித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
அதன்படி, நிர்மலா சீதாராமன் சென்னைக்கு விமானம் மூலம் நேற்று இரவு வந்தடைந்தார். இன்று காலை தூத்துக்குடிக்கு சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் அந்தோனியார் பாளையத்தில் ஏற்பட்டுள்ள சாலை சேதம் போன்ற பாதிப்புகளை நிர்மலா சீதாராமன் நேரடி நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
English Summary
Flood damage Union Minister Nirmala Sitharaman inspection