சேலம் அருகே சோகம்.! மின்சாரம் பாய்ந்து பூ வியாபாரி உயிரிழப்பு.!
Flower seller killed by electrocution in salem
சேலம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கட்டாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூ வியாபாரி பெருமாள் (40). இவரது மனைவி ஜோதி. இவர்கள் இரண்டு பேரும் கட்டாம்பட்டியில் பூக்கடை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பெருமாள் பூக்கடையில் ரேடியோ போடுவதற்காக மின்சார ஒயரை பிளகில் மாட்டியுள்ளார்.
அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜலகண்டாபுரம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Flower seller killed by electrocution in salem