மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி!...ஈசிஆர் சாலையில் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்! - Seithipunal
Seithipunal


உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை, சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோவில், ஐந்து ரதம்,  கிருஷ்ண மண்டபம், அர்ஜூனன் தபசு மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட குடவரை சிற்ப வளாகங்களில், சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

அதன் படி, இன்று மாமல்லபுரம் செல்லும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தாமல் புராதன சின்னங்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஈசிஆர் சாலையில்  சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free admission in mahabalipuram today tourists invading ecr road


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->