மதுபாட்டிலில் மிதந்த தவளை - தீவிர சிகிச்சை பிரிவில் வாலிபர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள வாத்தலை அருகே சென்னக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்று சிறுகாம்பூரில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது பாட்டில் வாங்கி கொண்டு இருட்டான பகுதியில் அமர்ந்து குடித்துள்ளார். 

அப்போது பாட்டிலில் ஏதோ அடைப்பு இருந்துள்ளது. உடனே அவர் செல்போனில் லைட் அடித்து பார்த்தபோது மது பாட்டிலில் இறந்த நிலையில் தவளை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் மது பாட்டிலுடன் கடைக்கு சென்று அங்கு விற்பனை பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

ஆனால் இதனை பொருட்படுத்தாத மதுபான ஊழியர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் இருந்த மது பாட்டிலை பிடுங்கி கீழே வீசி உடைத்துள்ளனர். இதையடுத்து வேல்முருகன் சிறுகாம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

frog flot in liquor bottle in trichy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->