சிறுமியின் உயிரை பறித்த 2 ஆயிரம் ரூபாய் பணம்.! கள்ளக்குறிச்சியில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா-விஜயகுமாரி தம்பதியினர். இவர்களுடைய மகள் ராகவி. இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இவரிடம் விஜயகுமாரி, ரூ.2 ஆயிரம் பணத்தைக் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பணத்தை ராகவி தொலைத்துள்ளார். இதையறிந்த விஜயகுமாரி ராகவியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கியுள்ளார்.

இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராகவியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ராகவி, பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரகவியின் தந்தை ராஜா போலீசில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl sucide in kallakurichi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->