சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை! சிக்கிய ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு இலட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

சமீப காலமாக விமானங்கள் மூலம் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு பொருட்கள் கடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை திருச்சி விமான நிலையத்தில்  சிங்கப்பூரில் வந்த பெண் பயணியிடம் இருந்து 5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பவம் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இரண்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருக்கும் போது அதில் தங்க நாணயத்தில் வெள்ளி மூலம் பூசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து மொத்தம் 781 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.39 லட்சம் என்று கூறப்படுகிறது. தங்கம் கடத்தி வந்த இரண்டு பயணிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்த சோதனைகளில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் வழக்கு தொடர்பாக 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold worth Rs 1 Crore confiscated at Chennai Airport


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->