தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து - அந்தரத்தில் ஊசலாடிய பயணிகளின் உயிர்.! - Seithipunal
Seithipunal


தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து - அந்தரத்தில் ஊசலாடிய பயணிகளின் உயிர்.!

சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சுமார் 40 பயணிகள் பயணம் செய்த இந்தப் பேருந்தை திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

இந்த நிலையில் இந்த பேருந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலையில் வெள்ளாற்று மேம்பாலத்தில் வந்துக் கொண்டிருந்த போது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

பின்னர் பாலத்தில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதி, சுவரை உடைத்துக்கொண்டு சென்று, முன்பகுதி மட்டும் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் கத்திக் கூச்சலிட்டனர்.

பேருந்தின் முன்பகுதி அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதற்கிடையே பயணிகளின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக ஓடி வந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு மீட்பு வாகனம் மூலம், அந்தரத்தில் தொங்கிய பேருந்தை மீட்டனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus accident in cuddalore seththiyathope


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->