வீடியோ பார்த்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இடைநீக்கம்..!
government bus driver suspend for watch vedio on mobile with driving
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கரூருக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து திருச்சியை கடந்து சென்றபோது, ஓட்டுநர் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு வீடியோ பார்த்தபடி பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. இதற்கிடையே பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் அவரிடம் செல்போன் பார்த்துக்கொண்டு பேருந்தை இயக்க வேண்டாம் என்று கண்டித்ததால், சிறிதுநேரம் அவர் செல்போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு பேருந்தை ஓட்டினார். ஆனால், அவர் மீண்டும் செல்போனில் வீடியோ பார்த்தபடி ஓட்டியுள்ளார்.

இந்த நிலையில் செல்போன் பார்த்தபடி பேருந்தை ஓட்டிய வீடியோ குறித்து கரூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் சரவணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் உத்தரவிட்டார்.
வாகனங்களை இயக்கும்போது செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், அந்த விதிமுறையை மதிக்காமல் அரசு பணியில் உள்ள ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
government bus driver suspend for watch vedio on mobile with driving