மகா விஷ்ணு கைதா? தமிழகத்தில் கால் வைத்ததும் நடந்தது என்ன? ரகசிய இடத்தில் என்ன நடக்கிறது?! - Seithipunal
Seithipunal



பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பைச் சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர், சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.

குறிப்பாக மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார். 

இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த மகா விஷ்ணுவை, விமான நிலையத்திலிருந்து ரகசிய இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விசாரணை முடிவில் அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்படலாம் என்று தகாவில் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government schools Superstition Police Complaint Mahavishnu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->