பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து.! ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பலி.!!
Govt Bus Accident Driver and Conductor death
பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்தில் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன் மற்றும் நடத்துனர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு படையினர் காயம் அடைந்த பயணிகளை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Govt Bus Accident Driver and Conductor death