கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து - 6 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கோயம்புத்தூரில் இருந்து 56 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது பரவை கொண்ட மாரி பாலம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சமயநல்லூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt bus accident in madurai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->