#வேலூர் || லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் உயிரிழப்பு.! 17 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, இன்று காலை வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பின் மீது மோதியது.

அப்பொழுது சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். மேலும் இந்த விபத்தில் 17 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt bus lorry accident in Vellore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->