திருச்சியில் காவல்துறை அராஜகம் அதிகமாகவுள்ளது - எச்.ராஜா பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- திமுக அரசு மொழி அரசியல் செய்து வருகிறது. 

மும்மொழி கொள்கை பிரச்சனையில் மக்கள் ஆதரவு இல்லை என்பதால் அதனை மறைப்பதற்காக தற்போது நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட எண்ணிக்கையில் குறையாது என்று உறுதி அளித்துள்ளார்கள். 

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நாங்கள் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் இதுவரைக்கும் 14 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். மே 31-ந் தேதிக்குள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி விடுவோம். திருச்சியில் காவல்துறை அராஜகம் மிக அதிகமாகமுள்ளது. 

தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மூன்று நாட்களாக அமலாக்க துறை சோதனை நடத்தியது. ரூ.1,000 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

h raja press meet in trichy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->