குடிநீர் குடித்த சிறிது நேரத்தில் நேர்ந்த விபரீதம்! பதறிய பொதுமக்கள்... நடந்தது என்ன.? - Seithipunal
Seithipunal


ஓசூர் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீரை குறித்த 15 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

ஓசூர், சின்ன எலசகரி அம்பேத்கார் நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த 15க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் என உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர் உள்ளிட்ட நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

மேலும் அவர்கள் குடித்த குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் ஓசூர் மாநகராட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hosur water problem public affected


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->