திருநெல்வேலியில் பரபரப்பு.! மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிவிட்டு கணவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலனை அறிவாளால் வெட்டிவிட்டு கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் ஆறுமுகத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் நாராயணன் (42). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்(42). இந்நிலையில் கிருபாகரனுக்கும், செந்தில் நாராயணனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையறிந்த செந்தில் நாராயணன் மனைவியை கண்டித்ததால் அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து செந்தில் நாராயணன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தும், அவர் வரவில்லை. இந்நிலையில், கிருபாகரன் மீது ஆத்திரத்தில் இருந்த செந்தில் நாராயணன், சம்பவத்தன்று அவரை சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில் நாராயணனை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செந்தில் நாராயணன் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் செந்தில் நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband commits suicide after cutting wife illegal boyfriend in tirunelveli


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->