#மதுரை || மனைவியிடம் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி, தோப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பிரபு. இவரது மனைவி கோகிலா.

இவர்கள் இருவருக்கும் நேற்று காலை குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோகிலா மீன் வியாபாரம் செய்வதற்காக வெளியில் சென்றுள்ளார்.

பிறகு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது படுக்கையறையில் கணவர் பிரபு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து பிரபுவை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பிரபுவை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband commits suicide by hanging in Madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->