#ஈரோடு || மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவர் தூக்கு போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சாய் அபிராமி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (59). இவரது மகன் விக்னேஸ்வரன். இவர் கள்ளிப்பட்டியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருடைய தகராறு முற்றிய நிலையில் ராமலிங்கத்தின் மனைவி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த ராமலிங்கம் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து விக்னேஸ்வரன் தந்தையை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றபோது, ராமலிங்கம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இராமலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in erode


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->