கள்ளக்குறிச்சியில் மனைவி கண்டித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
Husband suicide in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனைவி கண்டித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கார்த்திக்குமார்(29). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனை அவரது மனைவி தேவகி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக்குமார், தற்கொலை செய்து கொள்வதற்காக பருத்தி வயலுக்குச் சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கார்த்திக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கார்த்திக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மனைவி தேவகி கொடுத்த புகாரின் அடிப்படையில் வரஞ்சரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband suicide in kallakurichi