கிருஷ்ணகிரி: 2வது மனைவியுடன் தகராறு.! கணவர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் இருதுகோட்டை பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (49). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. ஆனால் தற்பொழுது மல்லப்பா இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். மல்லப்பாவுக்கும் மது அருந்து பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனம் உடைந்த மல்லப்பா நேற்று வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் மல்லப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in kirishnagiri


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->