கோவை: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
Husband suicide in kovai
கோவை மாவட்டத்தில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(30). இவர் கார் ஷோரூமில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் செல்வகுமார் மது குடிப்பதற்கு அடிமையாகி, தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை நந்தினி கண்டித்ததால், கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த செல்வகுமார் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கியுள்ளார்.
இதையடுத்து செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செல்வகுமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.