மதுரை அருகே பரிதாபம்.! அரசு பேருந்து மோதி கணவன்-மனைவி பலி.!
Husband wife killed in government bus collision in madurai
மதுரை மாவட்டத்தில் மொபட் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் அணைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி(55). இவர் பேரையூர் பகுதியில் நர்சரி கார்டன் வைத்துள்ளார். இவருடைய மனைவி மகாலட்சுமி(50). இந்நிலையில் சின்ன முனியாண்டியும், அவரது மனைவி மகாலட்சுமியும் நேற்று காலை டி.கல்லுப்பட்டியிலிருந்து பேரையூர் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது தேவன் குறிச்சி விளக்கு அருகே சென்றபோது நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இவர்களது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இரண்டு பேரும் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband wife killed in government bus collision in madurai